திருக்குறள்

602.

மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

திருக்குறள் 602

மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

பொருள்:

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.